வாசித்தல் திட்டம்
ஆசிரியர்: முனைவர் ஜாஸ்லின்
கற்றல் விளைவு: கதையை வாசித்து நன்கு புரிந்துகொண்ட பின், கதையின் மையக் கருத்தைக் கண்டறிவேன். (Reading and Understand the story, I will Identify the main Plot of the Story)
உதவி
ஒரு கட்டெறும்பு ஆற்று
தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
மரத்திலிருந்து இதைப்
பார்த்த புறா ஒன்று மரத்திலிருந்த இலை ஒன்றைப் பறித்து நீரில் வீசியது.
எறும்பும் தத்தித் தத்தி
வந்து அந்த இலையின் மேல் ஏறிக் கொண்டது. அந்த இலை காற்றில் அசைந்து மெதுவாகக்
கரைப்பக்கம் ஒதுங்கக் கரையில் ஏறி தப்பியது அந்த எறும்பு. புறாவுக்கும் நன்றி
கூறியது
மற்றொரு நாள்.
ஒரு வேடன் அந்த புறாவைக்
குறி வைப்பதைப் பார்த்தது அந்த எறும்பு.
ஆனால் புறாவோ இதை அறியாமல்
வேறெங்கோ கவனமாக இருந்தது. அன்று தன்னைக் காப்பாற்றிய புறாவின் உயிரைக் காப்பாற்ற
வேண்டியது தனது கடமையாக எண்ணியது எறும்பு.
விரைந்து சென்று வேடனின்
காலில் நறுக்கென்று கடித்தது.
கடியின் வலி தாங்க முடியாமல்
கத்திய வேடனின் குறி தப்பியது. சத்தத்தைக் கேட்டுத் திரும்பிய புறா
தனக்கேற்படவிருந்த ஆபத்தை அறிந்து அந்த இடத்தை விட்டுப் பறந்தது. எறும்புக்கும்
நன்றி சொன்னது
அன்று புறா நமக்கென்ன என்று
அலட்சியமாயிருக்காமல் உதவி செய்ததால்தான் புறாவின் உயிர் தப்பியது. அந்த சிறிய
உருவம் கொண்ட எறும்பும் நன்றி மறக்காமல் செயல்பட்டது.
எவருக்கும் எந்த நேரத்திலும்
நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும். அது போல் நமக்குச் செய்த நன்றியையும்
எந்தக் காலத்திலும் மறக்கக் கூடாது.
மையக் கதை: |
|
|
|
|
|
புதிய சொற்கள்: |
|
Comments
Post a Comment